<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>உணவு நலம் - இயற்கை உணவு - Unavu Nalam - Healthy Foods - Natural Foods</title>
	<atom:link href="http://unavunalam.com/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://unavunalam.com</link>
	<description></description>
	<lastBuildDate>Fri, 25 Jan 2013 13:32:46 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.org/?v=3.5.1</generator>
		<item>
		<title>சோர்வைத் தரும் உடல் பருமன்</title>
		<link>http://unavunalam.com/%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae/</link>
		<comments>http://unavunalam.com/%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae/#comments</comments>
		<pubDate>Fri, 25 Jan 2013 13:32:46 +0000</pubDate>
		<dc:creator>maniam</dc:creator>
				<category><![CDATA[Obesity]]></category>
		<category><![CDATA[உடல் இளைக்க]]></category>
		<category><![CDATA[உடல் பருமனாக காரணங்கள்]]></category>
		<category><![CDATA[உடல் பருமன்]]></category>
		<category><![CDATA[உணவு முறை சிகிச்சை]]></category>
		<category><![CDATA[காரணங்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://unavunalam.com/?p=2177</guid>
		<description><![CDATA[அதிக உடல் பருமன் கேலிக்குரியது மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். குறைந்தபட்சம் நமது இந்திய ஜனத்தொகையில் 5% மக்கள் மிக அதிக குண்டானவர்கள். அதிக பருமன் மன உடல் கோளாறு என்று இந்திய மருத்துவம் குறிப்பிடுகிறது. அதிக பருமனைக் குறைக்க தற்போது பல முறைகள் விளம்பரப்படுத்தப்படுகின்றன. தெருவுக்கு தெரு உடல் எடையை குறைக்கும் நிலையங்கள் வந்து விட்டன. புதுப்புது &#8216;பத்திய&#8217; உணவுமுறைகள், நூற்றுக்கணக்கான நூல்கள் உடல் பருமனைக் குறைக்கும் வழிகளைப் பற்றி, வெளிவந்திருக்கின்றன. இதனால் பயன் [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p></p><p style="text-align: justify;">அதிக உடல் பருமன் கேலிக்குரியது மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். குறைந்தபட்சம் நமது இந்திய ஜனத்தொகையில் 5% மக்கள் மிக அதிக குண்டானவர்கள். அதிக பருமன் மன உடல் கோளாறு என்று இந்திய மருத்துவம் குறிப்பிடுகிறது.<br />
அதிக பருமனைக் குறைக்க தற்போது பல முறைகள் விளம்பரப்படுத்தப்படுகின்றன. தெருவுக்கு தெரு உடல் எடையை குறைக்கும் நிலையங்கள் வந்து விட்டன. புதுப்புது &#8216;பத்திய&#8217; உணவுமுறைகள், நூற்றுக்கணக்கான நூல்கள் உடல் பருமனைக் குறைக்கும் வழிகளைப் பற்றி, வெளிவந்திருக்கின்றன. இதனால் பயன் ஏற்பட்டுள்ளதா என்பது வேறு விஷயம்.<br />
உலக சுகாதார நிறுவனம் (WHO) உடல் பருமனை (Obesity) அதிக அளவு &#8211; இயற்கைக்கு மாறாக &#8211; கொழுப்புச்சத்து உடலில் சேர்ந்து ஆரோக்கியத்திற்கு அபாயமான நிலை என விளக்குகின்றது. பழைய காலங்களில் மனிதர்கள் வாழ்வதற்காக சாப்பிட்டார்கள். இப்போது சாப்பிடுவதற்காக வாழ்கிறார்கள்.<br />
உடல் பருமனால் அவதிப்படுவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி &#8211; உடல் பருமனை குறைக்கலாம். வாழ்நாள் முழுவதும் அவதிப்பட தேவையில்லை.<br />
1. பண்டைக்கால இந்திய மருத்துவ நூல்கள் உடல் பருமன் ஏற்படுத்தும் பிரச்சனைகள் என கீழ்க்கண்ட ஏழு பிரச்சனைகளை குறிப்பிடுகின்றன. அவை<br />
1. குறைந்த ஆயுள்<br />
2. உடல் இயக்கம் மற்றும் உடலுறவு கொள்வது சிரமம்<br />
3. களைப்பு<br />
4. உடல் துர்நாற்றம்<br />
5. அதிக வியர்வை<br />
6. அதிக பசி<br />
7. அடங்காத தாகம்<br />
<strong>உடல் பருமனாக காரணங்கள்</strong><br />
1. ஸ்ட்ரெஸ் (Stress) &#8211; மன அழுத்தம் உங்களை அதிகம் சாப்பிட தூண்டும். கோபதாபங்கள், மனஅழுத்தம் போன்றவற்றால் உடலில் கோர்டி சால் (ஸ்டிராய்ட் ஹார்மோன்) இன்சுலின் ஹார்மோன்கள் சுரப்பது அதிகமாகும். இதனால் &#8216;உணவு வேட்கை&#8217; அதுவும் இனிப்புகள், கொழுப்பு செறிந்த உணவுகளை உண்ணும் &#8216;ஆசை&#8217; &#8211; ஏற்படுகிறது. அதிக கொழுப்பை உடல் சேமிக்கிறது. இதனால் கல்லீரல் வேலை அதிகமாக இன்சுலின் சுரப்பதை தடை செய்ய, உடனே கணையம் இன்சுலின் உற்பத்தியை அதிகமாக்கும்! எனவே உங்களின் பசி அடங்காமல் மறுபடியும் மறுபடியும் உணவு தேவைப்படும். மனச்சோர்வு (Depression) உடலை குண்டாக்கும்.<br />
2. பாரம்பரியம்<br />
3. உண்ணும் உணவிலுள்ள கலோரிகள், அதை &#8216;எரிப்பதை&#8217; விட அதிகமாக இருத்தல்<br />
4. கட்டுப்பாடின்றி உணவு உண்ணுதல் பசி இல்லாத போதும் சாப்பிடுவது<br />
5. தைராயிடு கோளாறுகள், குஷிங்ஸின்ட்ரோம் (Cushing syndrome) போன்ற நோய்கள்<br />
6. சில மருந்துகள்<br />
<strong>காரணங்கள்</strong><br />
1. உடலுழைப்பு இன்மை<br />
2. மதியம் தூங்குதல்<br />
3. உணவு, தவறான வாழ்க்கை முறையால் &#8216;கப&#8217; தோஷம் அதிகமாதல்<br />
4. இனிப்பான உணவுகள்<br />
உடல் பருமன் உண்டாக்கும் அபாயங்கள்<br />
1. அதிக ரத்த அழுத்தம்<br />
2. நீரிழிவு நோய்<br />
3. இதயம் அதிக வேலை செய்ய நேர்வதால் இதய கோளாறுகள்<br />
4. மூளைத்தாக்கு, பக்கவாதம்<br />
5. ஆர்த்தரைடீஸ்<br />
6. தூக்க நோய்கள்<br />
7. மலட்டுத்தன்மை<br />
8. மாதவிடாய் கோளாறுகள்<br />
குண்டான பெண்கள், சாதாரண பெண்களை விட 4 மடங்கு அதிகமாக ஆர்த்தரைடீஸ் வியாதிக்கு ஆளாகின்றனர். மார்பு புற்றுநோய், இதய நோய்கள், பித்தப்பை வியாதிகள், மலட்டுத்தன்மை, சிறுநீரக கோளாறுகள், சிறுநீர் அதிகம் போதல் போன்ற பல கோளாறுகள் குண்டான பெண்மணிகளை தாக்கும். குண்டான பெண்கள், பருமனான ஆண்களை விட அதிகம் கேலி செய்யப்படுகின்றனர்- இதனால் குண்டான பெண்மணிகளின் மனநிலை பாதிக்கப்படும்.<br />
<strong>உடல் இளைக்க உணவு முறை சிகிச்சை</strong><br />
உடல் இளைக்க பட்டினியிருக்கக் கூடாது. உண்ணும் உணவின் அளவு குறையாமல், எரிசக்தியை குறைக்க வேண்டும்! தீவிர உடற்பயிற்சிகள் தவிர, சிறிய அசைவுகள், குனிந்து நிமிர்ந்து வேலை செய்தல் போன்றவைகளும் உண்ட கலோரிகளை செலவழிக்க (எரிக்க) உதவும். உதாரணமாக 300 கலோரிகளை குறைத்து, இன்னொரு 200 கலோரிகளை &#8216;எரித்தால்&#8217; ஒரு வாரத்தில் கிட்டத்தட்ட 1/2 கிலோ எடை குறையும்.<br />
நார்சத்து நிறைந்த உணவுகள் உண்ட நிறைவையும், குறைந்த கலோரியையும் தரும்.<br />
ஒரு சாதாரண மனிதனுக்கு, தினம் அவருடைய ஒரு கிலோ உடல் எடைக்கு 33 கலோரிகள் தேவை. இந்த கணக்கில் நீங்கள் சாப்பிட வேண்டிய கலோரிகளை தெரிந்து கொள்ளலாம்.<br />
காலை உணவு அவசியம்.<br />
ஒரே தடவை அதிக உணவை உண்பதை விட, சிறு உணவாக (2 மணி நேரத்திற்கு ஒரு முறை) உண்ணவும்.<br />
எடை இழப்பு நிதானமாக இருக்க வேண்டும். ஒரு வாரத்தில் 1/2 (அ) 3/4 கிலோ இளைத்தால் போதுமானது.<br />
முழுதானியங்கள் நிறைந்த உணவு நல்லது. காலை உணவில் தானியங்களுடன், புரதம் நிறைந்த முட்டை அல்லது ஆடையில்லாத பாலில் செய்த &#8216;சீஸை&#8217; சேர்த்துக் கொள்ளலாம்.<br />
பாலை உபயோகிக்கையில் ஆடை அகற்றிய கொழுப்பு குறைவான பாலையே பயன்படுத்தவும்.<br />
இனிப்புகள், வறுத்த, பொரித்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.<br />
வீட்டில், அலுவலகத்தில் சிறிய உடற்பயிற்சிகளை செய்யவும். சுறுசுறுப்பாக நடக்கவும். லிப்டை பயன்படுத்தாமல், மாடிப்படிகளில் ஏறி இறங்கவும். உட்கார்ந்த நிலையில், நிற்கும் நிலையில் செய்யும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளவும்.<br />
மென்பானங்களை (Soft drinks) குடிக்க வேண்டாம். அதற்கு பதில் வெறும் தண்ணீர் குடிப்பது நல்லது.<br />
பசித்தால் ஆப்பிள் சாப்பிடுவது நல்லது. எடை குறைய உதவும். &#8216;சூப்&#8217; சாப்பிடுவதும் நல்லது. காய்கறி ஜுஸ், பழங்கள் இவற்றை எடுத்துக் கொள்ளலாம். பச்சைகாய்கறிகள், பாதாம் போன்ற கொட்டைகளை உண்ணலாம்.<br />
அடிக்கடி உடலுறவு கொள்ளுதலும் உடற்பயிற்சி தான்.<br />
ஸ்ட்ரெஸை (Stress) தவிர்க்க வேண்டியது மிகவும் அவசியம். யோகா, தியானம் தவிர சில உணவுகள் மனச்சோர்வை குறைக்க உதவும். ஒமேகா &#8211; 3 கொழுப்பு அமிலங்கள் கொலஸ்ட்ராலை குறைத்து மூளையை ஊக்குவிக்கும். மீன், பாதாம், வாதாம் பருப்பு போன்ற கொட்டை வகைகளில் ஒமேகா &#8211; 3 அதிகம் உள்ளது. க்ரீன் &#8211; டீ தினம் 3 வேளை குடித்தால் 3 மாதங்களில் 5% எடை குறையும். உணவு வேட்கை ஏற்படும் காரணம் மூளை தான்! வயிறோ, ருசி அறியும் நாக்கோ அல்ல! எனவே மன அழுத்தத்தை குறைத்து மூளை அமைதியானால் உணவு ஆசையை கட்டுப்படுத்தலாம்.<br />
நீங்கள் சரியாக தூங்குவது அவசியம். 7 லிருந்து 8 மணி நேரமாவது தூங்க வேண்டும். தூங்காவிட்டால் சந்தோஷத்தைத் தரும் செரோடோனின், டோபாமைன் ஆகியவை சுரக்காது. பின் மூளை என்ன செய்யும்? இவற்றுக்கு பதில் இனிப்பு உணவுகளை நாடும். இந்த பிரச்சனை வயதாக வயதாக அதிகரிக்கும். முதியோர்களின் பீனியல் சுரப்பி (Pineal gland), தூக்க ஹார்மோன் மெலாடோனினை குறைவாக சுரக்கும். இதனால் அதிக கார்போ-ஹைடிரேட் உண்ணும்&#8217;வெறி&#8217; ஏற்படும். தூக்கமில்லாதவர்கள் இரவில் ஏதாவது சாப்பிட வேண்டுமென்று அலைவதற்கு இது தான் காரணம். எனவே தூக்கமின்மையை குணப்படுத்திக் கொள்ளுங்கள். இரவுத் தூக்கம் உடல் எடையை சரிவர வைக்கும்.</p>
<p style="text-align: justify;">மார்ச் 2012</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://unavunalam.com/%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>எலும்புகள் வலுப்பெற</title>
		<link>http://unavunalam.com/%e0%ae%8e%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b2%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1/</link>
		<comments>http://unavunalam.com/%e0%ae%8e%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b2%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1/#comments</comments>
		<pubDate>Fri, 25 Jan 2013 10:21:07 +0000</pubDate>
		<dc:creator>maniam</dc:creator>
				<category><![CDATA[Vitamins Minerals]]></category>
		<category><![CDATA[எலும்புகள்]]></category>
		<category><![CDATA[எலும்புகள் வலுப்பெற]]></category>
		<category><![CDATA[கால்சியம்]]></category>
		<category><![CDATA[சிறுநீரகம்]]></category>
		<category><![CDATA[பால்]]></category>
		<category><![CDATA[விட்டமின் டி]]></category>

		<guid isPermaLink="false">http://unavunalam.com/?p=2173</guid>
		<description><![CDATA[&#8220;என்பிலதனை வெயில் போலக் காயுமே அன்பிலதனை அறம்&#8221; திருக்குறள். எலும்பில்லாத உயிர் தாங்கிய புழு போன்றவற்றை வெய்யில் காய்ந்து வருத்துவதைப் போல அன்பில்லாத உயிரை வாட்டும் அறம் என்பது இந்த குறளின் பொருள். உடலின் அஸ்திவாரம் எலும்பு. கொல்லாஜென் புரத நார்கள் எலும்பு தாது உப்புகளுடன் ஊறி எலும்பாகின்றன. இந்த எலும்பு தாது உப்புக்கள் கால்சியம் கார்பனேட்டும் கால்சியம் பாஸ்பேட்டும் ஆகும். உடலில் உள்ள கால்சியத்தில் 99% எலும்பிலும், பற்களிலும் உள்ளது. ரத்தத்தில், 100 மி.லி ரத்தத்தில் [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p></p><p style="text-align: justify;">
&#8220;என்பிலதனை வெயில் போலக் காயுமே<br />
அன்பிலதனை அறம்&#8221; திருக்குறள்.<br />
எலும்பில்லாத உயிர் தாங்கிய புழு போன்றவற்றை வெய்யில் காய்ந்து வருத்துவதைப் போல அன்பில்லாத உயிரை வாட்டும் அறம் என்பது இந்த குறளின் பொருள்.<br />
உடலின் அஸ்திவாரம் எலும்பு. கொல்லாஜென் புரத நார்கள் எலும்பு தாது உப்புகளுடன் ஊறி எலும்பாகின்றன. இந்த எலும்பு தாது உப்புக்கள் கால்சியம் கார்பனேட்டும் கால்சியம் பாஸ்பேட்டும் ஆகும். உடலில் உள்ள கால்சியத்தில் 99% எலும்பிலும், பற்களிலும் உள்ளது. ரத்தத்தில், 100 மி.லி ரத்தத்தில் 10 மி.கி. அளவில் கால்சியம் உள்ளது.<br />
மனிதனின் தினசரி கால்சியத் தேவை ஒரு கிராமாகும். பாலிலும், சீஸிலும் (Cheese) கால்சியம் நிறைந்துள்ளது. கால்சியம் உடலில் சேர உதவுவது விட்டமின் டி (D). கால்சியம் அளவு உடலில் அதிகமானால், சிறுநீரகம், மூத்திரப்பைகளில் கற்களாக உருவெடுக்கும்.<br />
எனவே எலும்புகள் வலிவடைய முதலில் விட்டமின் &#8216;டி&#8217; தேவை. இது சூரிய ஒளியிலிருந்து சுலபமாக கிடைக்கும். ஒரு டம்ளர் பால், தினமும் குடித்து வரவும். வயதானவர்கள் இரவில் பாலை குடிக்க வேண்டும். அவித்த முட்டையும் கால்சியம் நிறைந்தது.<br />
கீழ்க்கண்ட உணவுகளிலும் கால்சியம் உள்ளது. தினம் எவ்வளவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது அடைப்புகளில் கொடுக்கப்பட்டுள்ளது.<br />
1. வேர்க்கடலை (100 கிராம்)<br />
2. வெல்லம் (50 கி)<br />
3. பால் 250 மி.லி.<br />
4. முட்டை (ஒன்று)<br />
5. தயிர் (ஒரு கப்)<br />
6. மோர் (ஒரு கிளாஸ்)<br />
7. மீன் (200 கி)</p>
<p>வயதானவர்கள் கொள்ளை (ஒரு வாரத்திற்கு 100 கிராம் என்ற அளவில்)<br />
சேர்த்துக் கொள்ள வேண்டும். முதல் நாள் ஊற வைத்த கொள்ளை மறுநாள் கொதிக்க வைத்து, உப்பு, சீரகம், கறிவேப்பிலை, வெங்காயம் இவற்றை தாளித்து உட்கொள்ளலாம். இரண்டு நாளுக்கு ஒரு முறை கடலை மாவு சப்பாத்தி சாப்பிடுவதும் எலும்பை வலுவாக்கும். முளைவிட்ட பச்சைப்பயிறை சாப்பிடலாம்.</p>
<p style="text-align: right;">
பிப்ரவரி 2012</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://unavunalam.com/%e0%ae%8e%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b2%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>இயற்கை தரும் சர்க்கரை</title>
		<link>http://unavunalam.com/natural-sugar/</link>
		<comments>http://unavunalam.com/natural-sugar/#comments</comments>
		<pubDate>Fri, 25 May 2012 11:10:28 +0000</pubDate>
		<dc:creator>maniam</dc:creator>
				<category><![CDATA[Others]]></category>
		<category><![CDATA[இயற்கை தரும் சர்க்கரை]]></category>
		<category><![CDATA[இருமலுக்கு நல்லது]]></category>
		<category><![CDATA[கரும்பின் குணங்கள்]]></category>
		<category><![CDATA[கரும்பு]]></category>
		<category><![CDATA[சர்க்கரை பீட்ரூட்]]></category>
		<category><![CDATA[சிறுநீர் எரிச்சலை குறைக்கும்]]></category>
		<category><![CDATA[தொண்டை வலி]]></category>

		<guid isPermaLink="false">http://unavunalam.com/?p=1864</guid>
		<description><![CDATA[கிட்டத்தட்ட, பசுமையான எல்லா தாவரங்களுமே ஓரளவு சர்க்கரை உள்ளவைதான். ஆனால் வியாபார ரீதியில் சர்க்கரை தயாரிப்புக்காக பயன்படுபவை கரும்பும், சர்க்கரை பீட் (Sugar beet) ஆகியவைகளாகும். இதர &#8216;சர்க்கரை&#8217; பயிர்கள் &#8211; பனை, பேரீச்சை மரம், சுகர் மேபில் (Sugar Maple) போன்றவை. கரும்பு கரும்பு என்றாலே இனிமை. தோகையுடன் கூடிய கரும்பு, பொங்கல் பண்டிகையில் வீடுதோறும் காணப்படும். கரும்பின் விஞ்ஞானப் பெயர் Sacchrarum Officinarumபுல் வகையை சேர்ந்தது. பல வகைகளுள்ள கரும்பு 2 லிருந்து 6 [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p></p><p>கிட்டத்தட்ட, பசுமையான எல்லா தாவரங்களுமே ஓரளவு சர்க்கரை உள்ளவைதான். ஆனால் வியாபார ரீதியில் சர்க்கரை தயாரிப்புக்காக பயன்படுபவை கரும்பும், சர்க்கரை பீட் (Sugar beet) ஆகியவைகளாகும். இதர &#8216;சர்க்கரை&#8217; பயிர்கள் &#8211; பனை, பேரீச்சை மரம், சுகர் மேபில் (Sugar Maple) போன்றவை.<br />
<strong>கரும்பு</strong><br />
கரும்பு என்றாலே இனிமை. தோகையுடன் கூடிய கரும்பு, பொங்கல் பண்டிகையில் வீடுதோறும் காணப்படும். கரும்பின் விஞ்ஞானப் பெயர் Sacchrarum Officinarumபுல் வகையை சேர்ந்தது. பல வகைகளுள்ள கரும்பு 2 லிருந்து 6 மீட்டர் உயரம் வரை வளரும். கணுக்கள் உள்ள துண்டுகளை நட்டு பயிரிடப்படும். ஒரு தடவை நட்டால், பல தடவை அறுவடை செய்யலாம். முதல் அறுவடையில் கிடைக்கும் கரும்பின் அளவு அடுத்த அறுவடைகளில் குறைந்து கிடைக்கும். விவசாய முறைகளின் படி, 2 லிருந்து 10 அறுவடைகள் வரை கிடைக்கலாம்.<br />
உலகிலேயே கரும்பு அதிகம் விளைவது தென் அமெரிக்க கண்டத்திலுள்ள &#8216;பிரேஸில்&#8217; நாட்டிலாகும். அடுத்தது இந்தியா, பிறகு சீனா, மற்றபடி தென் அமெரிக்க நாடுகள், மேற்கிந்திய தீவுகள், க்யூபா இவைகளிலும் கரும்பு பயிரிடப்படுகிறது.<br />
உலகில் கிட்டத்தட்ட 200 தேசங்களில் கரும்பு பயிரிடப்பட்டு, 1324 மில்லியன் டன்கள் சர்க்கரை உற்பத்தி செய்யப்படுகிறது. முதலில் இந்தியாவில் தான் 2500 வருடங்களுக்கு முன் சர்க்கரை உருவாக்கப்பட்டது. கி.பி. 8 ம் நூற்றாண்டில் அரேபியர்கள் மத்திய தரைக்கடல் தேசங்களில் சர்க்கரையை அறிமுகப்படுத்தினர். ஸ்பெயினில் ஆரம்பித்த கரும்பு, அங்கிருந்து வட தென் அமெரிக்காவுக்கு, பரவியது. கிரிஸ்டோபர் கொலம்பஸ்ஸால் மேற்கிந்திய தீவுகளில் பயிரிடப்பட்டது. கரும்புத் தோட்டங்களில் வேலை செய்ய போதிய உள்ளூர்வாசிகள் இல்லாததால், ஆப்பிரிக்க, இந்தியா தேசங்களிலிருந்து அடிமைகள் கொண்டு செல்லப்பட்டனர்.<br />
<strong>கரும்பின் குணங்கள்</strong><br />
உள்ளழலாற்றும். குளிர்ச்சி தரும். உடலுக்கு புஷ்டி தரும். சிறுநீர் பெருக்கு. கரும்பின் வேர்களுக்கும் இந்த குணங்கள் உண்டு இதன் தண்ணீர் சேர்த்து செய்யப்பட்ட கஷாயம் சிறுநீர் எரிச்சலை குறைக்கும்.<br />
சரகஸம்ஹிதையின் படி கரும்பு 13 வகைப்படும். கரும்பு வாத பித்தங்களை தணிக்கும். சிறுநீரை வெளியேற்றும். மற்றும் சரக ஸம்ஹிதையின் படி கரும்பின் சிறப்பான தன்மைகள்:- கரும்பு மலத்தை வெளியேற்றும், உடலுக்கு செழிப்பையும், மகிழ்ச்சியையும் தரும். இரத்த தோஷத்தை வெளியேற்றும். பாணிதம் எனப்படும் பாகுபோல் காய்ச்சிய கருப்பஞ்சாறு உடலை வளர்க்கும். விந்துவையும் கபத்தையும் வளர்க்கும். சிறுநீர்ப்பையை தூய்மைப்படுத்தும்.<br />
சித்த வைத்திய பொருட்பண்பு நூல்களின் படி கருப்பஞ்சாறை புளிக்க வைத்து ஒரு வகை காடி செய்யலாம். இது கருப்பங் காடி எனப்படும். இது பசியை உண்டு பண்ணி, செரிமானத்தை அதிகரித்து, தாகத்தை போக்கும். தலைவலி, மயக்கம், தொண்டைப்புண், மூக்கில் நீர் பாய்தல் முதலியவற்றுக்கு இந்த காடியின் ஆவியை மூக்கினால் நுகர்ந்தால், குணமுண்டாகும்.<br />
நம்நாட்டு மருந்துகளில் கரும்பின் பாகு முக்கிய அம்சம் வகிக்கிறது. சூரணம், லேகியம் எதுவாகினும், கரும்புச்சர்க்கரை பாகுதான் உபயோகிக்கப்படுகிறது. கரும்பை நிலத்தி லிருந்து பிடுங்கி பற்களால் கடித்து உண்பதில் பற்கள், ஈறு பலப்படுகின்றன. வெய்யில் காலத்தில் கிடைக்கும் இஞ்சி, எலுமிச்சம் சாறு சேர்ந்த கரும்பு &#8216;ஜுஸ்&#8217; வெப்பத்தை தணிக்கும். தினசரி சாப்பிடாமல் வாரம் 3 நாட்கள் இந்த சாற்றை ப</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://unavunalam.com/natural-sugar/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>முதுகு வலி வராமல் இருக்க</title>
		<link>http://unavunalam.com/avoid-back-pain/</link>
		<comments>http://unavunalam.com/avoid-back-pain/#comments</comments>
		<pubDate>Fri, 25 May 2012 11:01:52 +0000</pubDate>
		<dc:creator>maniam</dc:creator>
				<category><![CDATA[Others]]></category>
		<category><![CDATA[ஆயுர்வேதம்]]></category>
		<category><![CDATA[காரணங்கள்]]></category>
		<category><![CDATA[சரியான முறையில் நடக்கவும்]]></category>
		<category><![CDATA[நிற்கும் போது நிமிர்ந்து நிற்கவும்]]></category>
		<category><![CDATA[முதுகு வலி]]></category>
		<category><![CDATA[முதுகெலும்பு பாதிப்புகள்]]></category>
		<category><![CDATA[முதுவலி வராமல் தடுக்க]]></category>
		<category><![CDATA[வராமல் இருக்க]]></category>

		<guid isPermaLink="false">http://unavunalam.com/?p=1862</guid>
		<description><![CDATA[முதுகு வலிக்கு முக்கிய காரணம் முதுகெலும்பு பாதிப்புகள். அதிகபட்ச எடையை முதுகெலும்பின் கீழ்ப்பகுதி தான் சுமக்கிறது. எனவே கீழ்பகுதி எலும்பு. தசை, தசை நார்கள் பாதிக்கப்பட்டால் வலி உண்டாகும். முதுகு வலி குறிப்பாக 45-65 வயதுகளில் உள்ளவரை தாக்கும். 70% மக்கள் தங்கள் வாழ்வில் ஒரு முறையாவது முதுகு வலியால் அவதிப்படுகிறார்கள். இதில் 90 சதவிகித நபர்களுக்கு முதுகுவலி தற்காலிகமாக வந்து மறைகிறது. 5 சதவிகித நபர்களுக்கு 3-4 மாதங்கள் பாதிப்பு ஏற்பட்டு பின்பு குறைகிறது. மீதி [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p></p><p style="text-align: justify;">முதுகு வலிக்கு முக்கிய காரணம் முதுகெலும்பு பாதிப்புகள். அதிகபட்ச எடையை முதுகெலும்பின் கீழ்ப்பகுதி தான் சுமக்கிறது. எனவே கீழ்பகுதி எலும்பு. தசை, தசை நார்கள் பாதிக்கப்பட்டால் வலி உண்டாகும். முதுகு வலி குறிப்பாக 45-65 வயதுகளில் உள்ளவரை தாக்கும். 70% மக்கள் தங்கள் வாழ்வில் ஒரு முறையாவது முதுகு வலியால் அவதிப்படுகிறார்கள். இதில் 90 சதவிகித நபர்களுக்கு முதுகுவலி தற்காலிகமாக வந்து மறைகிறது. 5 சதவிகித நபர்களுக்கு 3-4 மாதங்கள் பாதிப்பு ஏற்பட்டு பின்பு குறைகிறது. மீதி 5, சதவிகித மக்கள் தீவிரமாக நரம்பு வலியால் பாதிக்கப்படுகிறார்கள்.<br />
<strong>காரணங்கள்</strong><br />
ஆயுர்வேதத்தின் படி வாதக்கோளாறுகளால் முதுகுவலி உண்டாகிறது. ஒன்று உடற்பயிற்சி இல்லாமை இரண்டு அதிக உடற்பயிற்சி &#8211; இவை முதுகு வலிக்கு காரணமாகலாம்.<br />
சரியான அங்கஸ்திதி இல்லாதது அதாவது தேகம், நிற்கும், உட்காரும், சாயும் முறை தவறுகள், கனமான எடையை உடலை வளைத்து தூக்குதல்.<br />
<strong>முதுவலி வராமல் தடுக்க</strong><br />
சரியான முறையில் நடக்கவும். சௌகரியமான, உயரமில்லாத காலணிகளை அணியவும் பெட்டி போன்றவற்றை தூக்கிக் கொண்டு செல்கையில் அடிக்கடி பெட்டியை ஒரு கையிலிருந்து இன்னொரு கைக்கு மாற்றிக் கொண்டு நடக்கவும்.<br />
நிற்கும் போது நிமிர்ந்து நிற்கவும். ஒரு காலிலேயே நிற்காமல், கால் மாற்றி நிற்கவும். அதிக நேரம் நின்று கொண்டிருக்க வேண்டும்.<br />
உட்காரும் போது, முதுகை தாங்கிக் கொள்ளுபடியாக சாய்ந்து உட்காரவும் சாய்மானம் இல்லாமல் தரையில் உட்கார வேண்டும். உட்காரும் நாற்காலியில் பின்பாகம் (சாய்ந்து கொள்ள) நம் முதுகெலும்பு போல ஆங்கில் &#8216;s&#8217; வடிவத்தில் அமைந்திருக்க வேண்டும். உங்கள் கால்கள் தரையை தொடுமாறு நாற்காலியின் உயரம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். கால் மேல் கால் போட்டு உட்கார வேண்டாம். அதிக நேரம் உட்கார நேர்ந்தால், அடிக்கடி எழுந்து நடக்கவும். கார் ஓட்டும் போது நடுமுதுகை தாங்கிக் கொள்ள சிறிய தலையணைகளை உபயோகிக்கலாம். &#8216;ஸீட்டின்&#8217; &#8216;தலை தாங்கி&#8217; (Head &#8211; rest) சரியாக பயணம் செல்கையில், அடிக்கடி காரை நிறுத்தி, சிறிது நடை பயிலவும். முதுகு வலி வந்தால் நிறுத்திவிட்டு ஒய்வு எடுத்துக் கொள்ளவும்.<br />
தூங்கும் போது, குப்புற படுக்க வேண்டாம். பக்கவாட்டில் திரும்பிப்படுப்பது நல்லது. மல்லாந்து படுக்க வேண்டியிருந்தால் முழங்காலில் தலையணை வைத்துக் கொள்ளவும். படுக்கை அதிகமிருதுவாக இல்லாமல் கெட்டியாக இருக்க வேண்டும்.</p>
<p style="text-align: justify; padding-left: 420px;">ஜனவரி 2012</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://unavunalam.com/avoid-back-pain/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>அடை செய்முறை</title>
		<link>http://unavunalam.com/adai-recipes/</link>
		<comments>http://unavunalam.com/adai-recipes/#comments</comments>
		<pubDate>Fri, 25 May 2012 10:54:01 +0000</pubDate>
		<dc:creator>maniam</dc:creator>
				<category><![CDATA[Foods for Health]]></category>
		<category><![CDATA[அடை செய்முறை]]></category>
		<category><![CDATA[கேழ்வரகு காரடை]]></category>
		<category><![CDATA[கேழ்வரகு காரடை செய்முறை]]></category>
		<category><![CDATA[சுரைக்காய் வடை]]></category>
		<category><![CDATA[சுரைக்காய் வடை செய்முறை]]></category>
		<category><![CDATA[பப்பாளிக்காய் அடை]]></category>
		<category><![CDATA[பப்பாளிக்காய் அடை செய்முறை]]></category>
		<category><![CDATA[முருங்கை இலை அடை]]></category>
		<category><![CDATA[முருங்கை இலை அடை செய்முறை]]></category>
		<category><![CDATA[முழு உளுந்து அடை]]></category>
		<category><![CDATA[முழு உளுந்து அடை செய்முறை]]></category>
		<category><![CDATA[வெந்தய அடை]]></category>
		<category><![CDATA[வெந்தய அடை செய்முறை]]></category>

		<guid isPermaLink="false">http://unavunalam.com/?p=1860</guid>
		<description><![CDATA[முருங்கை இலை அடை தேவை முருங்கைக்கீரை &#8211; 1/4 கப் புழுங்கலரிசி &#8211; 2 கப் துவரம்பருப்பு &#8211; 1/4 கப் சீரகம் &#8211; 1 டீஸ்பூன் கறிவேப்பிலை &#8211; 1 ஆர்க்கு வெங்காயம் &#8211; 1 காய்ந்த மிளகாய் &#8211; 8 பெருங்காயம் &#8211; ருசிக்கேற்ப உப்பு &#8211; தேவைக்கேற்ப எண்ணெய் &#8211; 2 டே.ஸ்பூன் செய்முறை அரிசியை 3 மணி நேரமும், பருப்பை 1/2 மணி நேரமும் தனியாக ஊற வைக்கவும். இவற்றோடு, மிளகாய், [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p></p><p style="text-align: justify;">
<strong></strong><strong>முருங்கை இலை அடை</strong><br />
<strong>தேவை</strong></p>
<p style="padding-left: 180px; text-align: justify;"><strong></strong><br />
முருங்கைக்கீரை &#8211; 1/4 கப்<br />
புழுங்கலரிசி &#8211; 2 கப்<br />
துவரம்பருப்பு &#8211; 1/4 கப்<br />
சீரகம் &#8211; 1 டீஸ்பூன்<br />
கறிவேப்பிலை &#8211; 1 ஆர்க்கு<br />
வெங்காயம் &#8211; 1<br />
காய்ந்த மிளகாய் &#8211; 8<br />
பெருங்காயம் &#8211; ருசிக்கேற்ப<br />
உப்பு &#8211; தேவைக்கேற்ப<br />
எண்ணெய் &#8211; 2 டே.ஸ்பூன்</p>
<p style="text-align: justify;"><strong>செய்முறை</strong><br />
அரிசியை 3 மணி நேரமும், பருப்பை 1/2 மணி நேரமும் தனியாக ஊற வைக்கவும்.<br />
இவற்றோடு, மிளகாய், சீரகம், கறிவேப்பிலை, வெங்காயம் இவற்றை சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.<br />
உப்பும், முருங்கைக்கீரையும் சேர்க்கவும்.<br />
முன்பு சொல்லியது போல நான்-ஸ்டிக் தோசைக் கல்லை காய வைத்து எண்ணெய் விட்டு அடை சுடவும்.</p>
<p style="text-align: justify;">
<strong>பப்பாளிக்காய் அடை </strong><br />
<strong>தேவை</strong></p>
<p style="padding-left: 180px; text-align: justify;"><strong></strong><br />
பப்பாளிக்காய் &#8211; 21/2 கப் (துருவியது)<br />
கோதுமை மாவு &#8211; 1/2 கப்<br />
அரிசி மாவு &#8211; சிறிதளவு</p>
<p style="padding-left: 180px; text-align: justify;">பச்சைமிளகாய் விழுது &#8211; 2 டீஸ்பூன்<br />
உப்பு &#8211; தேவைக்கேற்ப<br />
கொத்தமல்லித்தழை &#8211; 2 டே.ஸ்பூன்</p>
<p style="text-align: justify;"><strong>செய்முறை</strong><br />
துருவிய பப்பாளிக்காயை பிழிந்து அதிக ஈரத்தை எடுத்து விட்டு அதோடு உப்பு மிளகாய் விழுது, கொத்தமல்லித் தழையைச் சேர்த்துக் கலக்கவும்.<br />
அதோடு பிடிக்கும் வரை கோதுமை மாவு, அரிசி மாவு சேர்த்துக் கலக்கவும்.<br />
சிறிய அடைகளாகத் தட்டி தோசைக்கல்லில் சிறிதளவே எண்ணெய் விட்டு இருபுறமும் சுட்டு எடுக்கவும்.</p>
<p style="text-align: justify;">
<strong>சுரைக்காய் வடை</strong><br />
<strong>தேவை</strong></p>
<p style="padding-left: 180px; text-align: justify;"><strong></strong><br />
சுரைக்காய் &#8211; 21/2 கப் (துருவியது)<br />
கோதுமை மாவு &#8211; 1/2 கப்<br />
அரிசி மாவு &#8211; சிறிதளவு<br />
பச்சைமிளகாய் விழுது &#8211; 2 டீஸ்பூன்<br />
உப்பு &#8211; தேவைக்கேற்ப<br />
கொத்தமல்லித்தழை &#8211; 2 டே.ஸ்பூன்</p>
<p style="text-align: justify;"><strong>செய்முறை</strong><br />
துருவிய சுரைக்காயை பிழிந்து அதிக ஈரத்தை எடுத்து விட்டு அதோடு உப்பு மிளகாய் விழுது, கொத்தமல்லித் தழையைச் சேர்த்துக் கலக்கவும்.<br />
அதோடு பிடிக்கும் வரை கோதுமை மாவு, அரிசி மாவு சேர்த்துக் கலக்கவும்.<br />
சிறிய அடைகளாகத் தட்டி தோசைக்கல்லில் சிறிதளவே எண்ணெய் விட்டு இருபுறமும் சுட்டு எடுக்கவும்.</p>
<p style="text-align: justify;">
<strong>முழு உளுந்து அடை</strong><br />
<strong>தேவை</strong></p>
<p style="padding-left: 180px; text-align: justify;"><strong></strong><br />
புழுங்கலரிசி &#8211; 21/2 கப்<br />
துவரம்பருப்பு &#8211; 2 கப்<br />
கருப்பு முழு உளுந்து &#8211; 1 கப்<br />
சிகப்பு மிளகாய் &#8211; 10<br />
மிளகு &#8211; 1 டீஸ்பூன்<br />
சீரகம் &#8211; 11/2 டீஸ்பூன்<br />
உப்பு &#8211; தேவைக்கேற்ப<br />
எண்ணெய் &#8211; 2 டே.ஸ்பூன்<br />
கொத்தமல்லி &#8211; 1 கப் (நறுக்கியது)</p>
<p style="text-align: justify;"><strong>செய்முறை</strong><br />
அரிசியையும், துவரம் பருப்பையும் ஒன்றாகக் கழுவி 3 மணி நேரம் ஊற வைக்கவும்.<br />
கிரைண்டரில் அரைக்கும் போது இதோடு மிளகாய், மிளகு, சீரகம் சேர்த்து நன்றாக அரைக்கவும்.<br />
முழு உளுந்தை ஊற வைக்காமல், கழுவின உடனே தனியாக கரகரப்பாக அரைத்து பிறகு உப்பு, சேர்த்து ஒரு நிமிடம் அரைத்த அரிசி விழுதோடு சேர்த்து அரைத்து எடுக்கவும்.<br />
அவரவர் விருப்பப்படி கீரையை கலந்து அடையாக சுட்டு சாப்பிடலாம்.<br />
கீரை சேர்க்காமல் தோசை போல ஊற்றியும் சாப்பிடலாம்.</p>
<p style="text-align: justify;"><strong>கேழ்வரகு காரடை</strong><br />
<strong>தேவை</strong></p>
<p style="padding-left: 180px; text-align: justify;"><strong></strong><br />
கேழ்வரகு மாவு &#8211; 2 கப்<br />
வேக வைத்த காரமணிப்பயறு &#8211; 1/4 கப்<br />
உப்பு &#8211; தேவைக்கேற்ப<br />
மிளகாய்த்தூள் &#8211; சிறிதளவு<br />
சுடுதண்ணீர் &#8211; மாவு பிசைய</p>
<p style="text-align: justify;"><strong>செய்முறை</strong><br />
கேழ்வரகு மாவை லேசாக வெறும் வாணலியில் சூடாக்கவும்.<br />
அடுப்பில் இருந்து இறக்கி அதோடு, வேக வைத்த காராமணி, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாகக் கலந்து விட்டு போதிய சுடுதண்ணீர் விட்டுப் பிசையவும்.<br />
சிறிய உருண்டைகளாக உருட்டி 1/4 அங்குல கனத்திற்கு அடை போல சிறிய வாழை இலைகளில் தட்டவும்.<br />
இலையோடு அப்படியே ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.</p>
<p style="text-align: justify;">
<strong>வெந்தய அடை</strong><br />
<strong>தேவை</strong></p>
<p style="padding-left: 180px; text-align: justify;"><strong></strong><br />
வெந்தயக் கீரை &#8211; 2 கட்டு<br />
பச்சரிசி &#8211; 2 கப்<br />
புழுங்கலரிசி &#8211; 1 கப்<br />
கடலைப்பருப்பு &#8211; 1/2 கப்<br />
உளுத்தம் பருப்பு &#8211; 11/2 டே.ஸ்பூன்<br />
காய்ந்த மிளகாய் &#8211; 10<br />
பெருங்காயம் &#8211; சிறிதளவு<br />
உப்பு &#8211; தேவைக்கேற்ப</p>
<p style="text-align: justify;"><strong>செய்முறை</strong><br />
வெந்தயக்கீரையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.<br />
உளுத்தம் பருப்பை தனியாக ஊற வைக்கவும்.<br />
இரண்டு வித அரிசியையும் ஒன்றாகக் கலந்து கடலைப்பருப்பையும் சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்.<br />
உளுத்தம் பருப்பை நன்றாக நுரைக்க அரைத்துக் கொள்ளவும். மற்ற ஊற வைத்த பொருட்களையும், மிளகாய், உப்பு பெருங்காயம் இவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைக்கவும். இரண்டு மாவுகளையும் ஒன்றாகக் கலந்து கொள்ளவும். பின் வெந்தயக் கீரையையும் சேர்த்து அடைகளாக சுட்டு எடுக்கவும்.</p>
<p style="text-align: justify;">
ஜனவரி 2012</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://unavunalam.com/adai-recipes/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>முதியோர் குறைவாக சாப்பிடுவது நல்லதா</title>
		<link>http://unavunalam.com/why-elders-eat-less/</link>
		<comments>http://unavunalam.com/why-elders-eat-less/#comments</comments>
		<pubDate>Fri, 25 May 2012 10:44:29 +0000</pubDate>
		<dc:creator>maniam</dc:creator>
				<category><![CDATA[Foods for Health]]></category>
		<category><![CDATA[குறைவாக சாப்பிடுவது நல்லதா]]></category>
		<category><![CDATA[பி காம்ப்ளக்ஸ்]]></category>
		<category><![CDATA[முதியோருக்கு இரும்புச்சத்து அவசியம்]]></category>
		<category><![CDATA[முதியோர்]]></category>
		<category><![CDATA[முதியோர்களின் கால்ஷியத் தேவை]]></category>
		<category><![CDATA[வைட்டமின் ஏ]]></category>
		<category><![CDATA[வைட்டமின் சி]]></category>

		<guid isPermaLink="false">http://unavunalam.com/?p=1857</guid>
		<description><![CDATA[பொதுவாக வயது ஏற ஏறக் குறைவாகத் தான் முதியோர்கள் உணவு உண்கிறார்கள். இதற்கு என்ன காரணம்? இது சரியா? வயது அதிகரிக்க அதிகரிக்க நாவில் உள்ள சுவை உணரும் திறன் குறைகின்றது. நாசியில் உள்ள மணம் அறியும் திறன் குறைகின்றது. உடலின் அனைத்து இயக்கங்களும் குறைகின்றது. முதன்மையாக ஜீரண மண்டலத்தின் செயல்பாடுகள் குறைகின்றன. இவை அனைத்திற்கும் மேலாக மனரீதியாக பலப்பல பிரச்சனைகளாக அவர்கள் சந்திக்க நேரிடுகிறது. உதாரணமாக தனிமை, மனச்சோர்வு, மனஅழுத்தம், ஓய்வு போன்றவை. முதியோர்கள் தங்களது [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p></p><p style="text-align: justify;">பொதுவாக வயது ஏற ஏறக் குறைவாகத் தான் முதியோர்கள் உணவு உண்கிறார்கள். இதற்கு என்ன காரணம்? இது சரியா? வயது அதிகரிக்க அதிகரிக்க நாவில் உள்ள சுவை உணரும் திறன் குறைகின்றது. நாசியில் உள்ள மணம் அறியும் திறன் குறைகின்றது. உடலின் அனைத்து இயக்கங்களும் குறைகின்றது. முதன்மையாக ஜீரண மண்டலத்தின் செயல்பாடுகள் குறைகின்றன. இவை அனைத்திற்கும் மேலாக மனரீதியாக பலப்பல பிரச்சனைகளாக அவர்கள் சந்திக்க நேரிடுகிறது. உதாரணமாக தனிமை, மனச்சோர்வு, மனஅழுத்தம், ஓய்வு போன்றவை.<br />
முதியோர்கள் தங்களது ஜீரண சக்திக்கு ஏற்ப குறைவான உணவுகளை எடுத்துக் கொள்வதில் தவறு ஒன்றுமில்லை. முதியோர்களுக்கு என தனியான சிறப்பு உணவு முறை எதுவும் அவசியமில்லை அவர்கள் இது நாள் வரை எடுத்துக் கொண்டு வந்த உணவுகளையே எடுத்துக் கொள்ளலாம், இருப்பினும் சிற்சில சிறிய மாற்றங்களை அவர்கள் கடைபிடித்தார்களானால் அவர்களுக்கு உணவினால் எந்த ஒரு உடல் உபாதையும் ஏற்படாது.<br />
திடீரென உணவு முறையில் முதியவர்கள் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தக்கூடாது. இது நாள் வரை உட்கொண்ட உணவையும் முறையையும் கடைபிடிப்பது மிகவும் நல்லது இருப்பினும் குறைவாக உணவு உட்கொள்ளும் காரணத்தால் சத்தான உணவுகளை உட்கொள்வது மிக மிக அவசியம்.<br />
குறைவான உணவு அளவுகளில் போதுமான சத்துக்கள் கிடைக்கும் வண்ணம் சில சிறிய கீழ்க்கண்ட மாற்றங்களைச் செய்துகொள்ளலாம். உடனடியாக மாற்றங்கள் செய்யக்கூடாது. என்பதனை அனைத்து முதியவர்களும் உணர வேண்டும்.<br />
<strong>தானியங்கள்</strong><br />
அரிசி உணவையும் அரிசியால் தயாரிக்கப்பட்ட பிற உணவுகளைக் குறைத்துக் கொண்டு நார்ச்சத்து நிறைந்த பிற தானிய உணவுகளான கோதுமை ராகி போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.<br />
<strong>புரதம்</strong><br />
புரத உணவுகள் முதியோருக்கு இன்றியமையாத உணவுகளாகும். பால், முட்டை, பீன்ஸ், பட்டாணி, பயறுகள், கொட்டைகள், தானியங்கள், மீன், கோழி, இறைச்சி போன்றவற்றை அவரவரது ஜீரண சக்திக்கு ஏற்ப அடிக்கடி எடுத்துக்கொள்ளலாம்.</p>
<p style="text-align: justify;"><strong>கால்ஷியம்</strong></p>
<p style="text-align: justify;">முதியவர்களின் கால்ஷியத் தேவை அதிகமாக இருக்கும். எலும்புகளுக்கும், பற்களுக்கும் தேவையான கால்ஷியம் சத்தை மீன், நண்டு, பால், ராகி, கீரைகள் போன்றவற்றிலிருந்து பெறலாம்.<br />
<strong>இரும்பு</strong><br />
முதியோருக்கு புதிய இரத்த செல்களை உற்பத்தி செய்திட இரும்புச்சத்து தேவைப்படும். அதனைப் பெற்றிட அவர்கள், வெல்லம், தேள், கீரைகள், கோதுமை, பேரீச்சம்பழம், ஈரல், போன்றவற்றை உட்கொள்ளலாம்.<br />
<strong>வைட்டமின் ஏ, சி மற்றும் பி காம்ப்ளக்ஸ்</strong><br />
உடலின் சீரான இயக்கத்திற்கும் இயல்பான செயல்பாட்டிற்கும் வைட்டமின் ஏ, சி மற்றும் பி காம்ப்ளக்ஸ் தேவை இவற்றை முதியவர்கள் காய்கறி, பழங்கள், தானியங்கள், கொட்டைகள், கீரைகள், மீன், பால் மற்றும் பால் பொருட்களிலிருந்து எளிதாகப் பெற்றிடலாம்.<br />
வயது முதிர்ந்தவர்கள் குறைவாக உணவு உண்பது மிக மிக அவசியம். அமெரிக்க நாட்டில் நடத்தப்பட்ட ஆராய்ச்சயில் எலிகளுக்கு குறைவான உணவு கொடுப்பதால் அவை அதிக நாட்கள் உயிர் வாழ்வது கண்டறியப்பட்டது. எனவே முதியோர்கள் அரை வயிறு உணவு உண்பது மிகவும் நல்லது என உறுதி செய்யப்பட்டது. கலோரி அளவுகள் குறைவாக உள்ள உணவுகளை அரை வயிறும், கால் வயிறும் தண்ணீரும் கால் வயிறு காலியாக வைத்துக் கொள்வதும் வாழ்நானை நீடிப்பதோடு மட்டுமல்லாமல் வேறு எந்த உடல் உபாதைகள் வருவதையும் தடுத்து விடும்.<br />
பலரும் அசைவ உணவுகளை விட்டு விட்டு சைவ உணவிற்கு மாறிவிடுகின்றனர். இதற்கு தனியான ஒரு காரணமே கிடையாது. அவர்கள் அவ்வாறு மாறிக் கொள்வதற்கு கீழ்க்கண்டவைகள் காரணமாக அமையலாம்.<br />
அசைவ உணவை விட எளிதாக சைவ உணவை மென்று சாப்பிடலாம் &#8211; பற்கள் வலுவில்லாமல் இருக்கலாம்.<br />
அசைவ உணவுகளை ஜீரணிப்பதற்குத் தேவையான சக்தியை விட சைவ உணவுகளை ஜீரணிக்க குறைவான சக்தி தேவைப்படலாம் &#8211; ஜீரண சக்தி குறைவால் மலச்சிக்கல் போன்றவை ஏற்படலாம்.<br />
அசைவ உணவில் அதிகமான கொழுப்புச் சத்து, புரதம் போன்றவற்வையும், காய்கறி, மற்றும் பழங்களில் போதுமான அளவு நார்ச்சத்தும் நுண்ணுட்டச்சத்துக்களும் கிடைக்கின்றன.<br />
சைவமோ அசைவமோ எதுவாக இருந்தாலும் அவரவர்கள் பழக்கத்திற்கு ஏற்ப, ஜீரண சக்திக்கு ஏற்ப அனைத்து சத்துக்களும் சமச்சீராக அடங்கிய உணவினை உட்கொண்டு வந்தால் முதியோர் எளிதாக தங்கள் முதுமையை வெல்லலாம்.</p>
<p style="text-align: justify;">
ஜனவரி 2012</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://unavunalam.com/why-elders-eat-less/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>வெல்லம்</title>
		<link>http://unavunalam.com/jaggery/</link>
		<comments>http://unavunalam.com/jaggery/#comments</comments>
		<pubDate>Fri, 25 May 2012 07:50:05 +0000</pubDate>
		<dc:creator>maniam</dc:creator>
				<category><![CDATA[Others]]></category>
		<category><![CDATA[ஆயுர்வேத மருந்து]]></category>
		<category><![CDATA[ஆயுர்வேதம்]]></category>
		<category><![CDATA[கரும்பு வெல்லம்]]></category>
		<category><![CDATA[பசியை தூண்டும்]]></category>
		<category><![CDATA[பனைமரம்]]></category>
		<category><![CDATA[பனைவெல்லம்]]></category>
		<category><![CDATA[பயன்கள்]]></category>
		<category><![CDATA[மருத்துவ குணங்கள்]]></category>
		<category><![CDATA[வெல்லம்]]></category>

		<guid isPermaLink="false">http://unavunalam.com/?p=1852</guid>
		<description><![CDATA[வெல்லம் என்று பொதுவாக நாம் சொல்வது, கரும்புச்சாறிலிருந்து எடுக்கப்படும் வெல்லத்தை தான். ஆனால் பனை மரத்திலிருந்தும், பேரீச்சமரத்திலிருந்தும் கூட, நல்ல தரமான வெல்லம் கிடைக்கிறது. ஏன், ஜவ்வரிசி மரம், தென்னை மரத்திலிருந்தும் எடுக்கப்படும் மரச்சாற்றிலிருந்து வெல்லம் கிடைக்கும். கரும்பு வெல்லம் கரும்பிலிருந்து எடுக்கப்படும் கரும்புச்சாறிலிருந்து வெல்லமும், சர்க்கரையும் கிடைக்கின்றன. வெல்லம் நீர் பசையின்றி கெட்டியாக காய்ச்சப்பட்ட கரும்புச் சாறிலிருந்து கிடைக்கும். கரும்புச்சாற்றை காய்ச்சும் போது, கெட்டி வெல்லமாகும் பதத்திற்கு முன்பே இறக்கப்பட்ட வெல்லம் &#8216;இளம்பத வெல்லம்&#8217; எனப்படும். [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p></p><p style="text-align: justify;">வெல்லம் என்று பொதுவாக நாம் சொல்வது, கரும்புச்சாறிலிருந்து எடுக்கப்படும் வெல்லத்தை தான். ஆனால் பனை மரத்திலிருந்தும், பேரீச்சமரத்திலிருந்தும் கூட, நல்ல தரமான வெல்லம் கிடைக்கிறது. ஏன், ஜவ்வரிசி மரம், தென்னை மரத்திலிருந்தும் எடுக்கப்படும் மரச்சாற்றிலிருந்து வெல்லம் கிடைக்கும்.<br />
<strong>கரும்பு வெல்லம்</strong><br />
கரும்பிலிருந்து எடுக்கப்படும் கரும்புச்சாறிலிருந்து வெல்லமும், சர்க்கரையும் கிடைக்கின்றன. வெல்லம் நீர் பசையின்றி கெட்டியாக காய்ச்சப்பட்ட கரும்புச் சாறிலிருந்து கிடைக்கும். கரும்புச்சாற்றை காய்ச்சும் போது, கெட்டி வெல்லமாகும் பதத்திற்கு முன்பே இறக்கப்பட்ட வெல்லம் &#8216;இளம்பத வெல்லம்&#8217; எனப்படும். இந்த இளம் பதம் மருந்துகளில் பயன்படும். வெல்லப் பாகை விட எளிதில் ஜீரணமாகும்.<br />
கரும்புச்சாறை சுண்ட காய்ச்சப்படும் போது, வெல்லம் கெட்டியாக கிடைக்காது வெல்லப்பாகை அச்சுக் குழிகளில் ஊற்றாமல், பலகையில் ஊற்றித் தேய்த்தால் சர்க்கரை கிடைக்கிறது. பாகின் அழுக்கை நீக்கி, ரசாயன கலவைகளை சேர்த்து, வெளுப்பான கல்கண்டு, டைமன்ட் கல்கண்டு தயாரிக்கப்படுகிறது.<br />
&#8216;கரும்பு&#8217; வெல்லம் &#8211; வயிற்றில் வாய்வு சேர்வதை தடுக்கும். புஷ்டி தரும். சிறுநீரை பெருக்கும். ஆனால் வயிற்றில் புழுக்களை உண்டாக்கும். கிருமி உள்ளவர்களுக்கு வெல்லம் ஏற்றதல்ல. சித்த வைத்தியத்தின் பாட்டு ஒன்று வெல்லத்தின் குணத்தை விவரிக்கிறது.<br />
குன்ம பித்தம் போக்குமதி கோழைதனை யுண்டாக்குந்<br />
துன்மலத்துட் கீடத்தைத் தோற்றுவிக்கும் &#8211; நன்மைபோல்<br />
மெல்லமது நீரை விளைவிக்கு மாமதுர<br />
வெல்லமென நாளும் விளம்பு.<br />
<strong>பனைமரம்</strong><br />
இந்தியா முழுவதும், குறிப்பாக தென் இந்தியாவில் பரவலாக காணப்படும் உபயோகமான மரம் பனைமரமாகும். தமிழ் நாட்டில், பனைமரத்தை &#8216;கற்பக விருஷம்&#8217; என்பார்கள். ஏனென்றால் மரம் முழுவதும் பயன்படும். 800 வகைகளில் பனைமரம் உபயோகமாகிறது! நெடிய மரமாக 30 மீட்டர் உயரம் வரை பனைமரம் வளரும். இலைகள் நீட்டமாக விசிறி போல் இருக்கும். இலைகள் 2-3 மீட்டர் நீளம் இருக்கும். பூக்கள் சிறியவை. பழங்கள் (நுங்கு) பெரியதாக, வட்டமாக, பழுப்பு நிறத்துடன் இருக்கும்.<br />
மரங்களிலிருந்து பால் போன்ற மரச்சாறு எடுக்கப்படும். மரம் நட்டபின் 15 வருடம் வளர்ந்தபின், &#8220;பால்&#8221; எடுப்பதை ஆரம்பிக்கலாம். இதை 30-40 வருடங்கள் வரை செய்யலாம். வருடத்தில் 4-5 மாதங்கள் &#8220;மரச்சாற்றை&#8221; (&#8216;பால்&#8217;) எடுக்கலாம். ஒரு பனை மரம் 225-360 லிட்டர் மரச்சாற்றை (வருடத்தில்) கொடுக்கும். பனைமரம், பேரீச்சமரம் போல, ஒரு பாலைவன தாவரம்.<br />
பனை மரச்சாறை (&#8216;பாலை&#8217;) ஒரு பெரிய, அகலமான, அதிக ஆழமில்லா பாத்திரத்தில் காய்ச்சப்படும். 200 டிகிரி சென்டிகிரேட் வரை காய்ச்ச, பனஞ்சர்க்கரை, வெல்லம் இவை கிடைக்கும். பனை வெல்லத்தில் தாதுப்பொருட்கள் அதிகம். ஆயுர்வேதத்தில், தொண்டை மற்றும் நுரையீரல் பாதிப்புகளுக்கு கொடுக்கும் மருந்துகளில் வெல்லம் சேர்க்கப்படுகிறது.<br />
<strong>பனை வெல்லம் மருத்துவ குணங்கள்</strong><br />
பனை வெல்லம், பனங்கற்கண்டு வாத பித்தம் நீங்கும். பசியை தூண்டும். புஷ்டி தரும். முன்பு சொன்னபடி, நுரையீரல் மற்றும் தொண்டை பாதிப்புகளுக்கு கொடுக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளில் பனைவெல்லம் சேர்க்கப்படுகிறது.<br />
எலிகளை வைத்து நடத்திய பரிசோதனை யில் பனைவெல்லம், நிலக்கரி மற்றும் ஸிலிகா தூசிகளால் ஏற்படும் நுரையீரல் பாதிப்பை குறைக்கும் என்பது தெரிய வந்துள்ளது.<br />
வெல்லம் அயச்சத்து மிகுந்தது. சோகை நோய்களுக்கு மருந்து. தமிழகத்தில் பனை மரத்தின் வெல்லத்தை இரண்டு வகையாக சொல்வார்கள். முற்றிலும் சுத்தப்படுத்தாத, கெட்டியான கரு நிற வெல்லத்தை &#8220;கருப்பட்டி&#8221; என்பார்கள். இதை சுத்தப்படுத்தப்பட்ட படிகங்களாக உருவாகும் சர்க்கரை &#8216;பனங்கற்கண்டு&#8217; எனப்படும் இதற்கு மருத்துவ குணங்கள் உள்ளன. பாலில் பனங்கற்கண்டை சேர்த்து காய்ச்சி குடித்தால் மார்புச்சளி இளகும். முக்கியமாக தொண்டைப்புண், வலி இவை அகலும். சங்கீத வித்வான்கள் எப்போதும் பனங்கற்கண்டு கலந்து காய்ச்சிய பாலையே அருந்துவது வழக்கம். அதனால் அவர்களின் குரல் வளம் குறையாமல், பாதுகாக்கப்படுகிறது. கூடவே சில மூலிகைகளும் சேர்க்கப்படுவது உண்டு.<br />
தவிர பனங்கற்கண்டு, உடல் உஷ்ணம், காங்கை, நீர் சுருக்கு, ஜுர வெப்பங்கள் இவற்றுக்கு நல்லது.<br />
<strong>பிற பயன்கள்</strong><br />
பனை வெல்லம் சமையலில் இந்தியா வில் பரவலாக பயன்படுகிறது. ஒரு சிறு துண்டு வெல்லத்தை சாம்பார், ரசம் இவற்றில் போடுவது வழக்கம். குஜராத்தில் பருப்பு சூப்புகளில் வெல்லம் சேர்ப்பதுண்டு. வெல்லத்தால் கடலை மிட்டாய், எள்ளுருண்டை போன்றவை செய்யப்படுகின்றன.<br />
உலகிலேயே பெரிய &#8220;வெல்லச்சந்தைகள்&#8221; இரண்டும் இந்தியாவில் தான் உள்ளன. முதன்மையானது, உத்திரப்பிரதேசத்தின் முஜாப்பூர் மாவட்டம் இரண்டாவது ஆந்திரபிரதேசத்தின் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள &#8216;அனகாட்பள்ளி&#8217;. அனகாட் பள்ளி வெல்லம் உலகபுகழ் பெற்றது.<br />
ஆயுர்வேதத்தில், இகூ வர்க்கம் என்று கரும்பு, அதன் சாறு, சர்க்கரை, வெல்லம், கல்கண்டு போன்றவற்றை குறிக்கிறது.</p>
<p style="text-align: justify;">
<p style="text-align: justify; padding-left: 420px;">ஜனவரி 2012</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://unavunalam.com/jaggery/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>இனிய குரல் வளம் பெற</title>
		<link>http://unavunalam.com/to-get-a-sweet-voice/</link>
		<comments>http://unavunalam.com/to-get-a-sweet-voice/#comments</comments>
		<pubDate>Mon, 30 Apr 2012 13:55:34 +0000</pubDate>
		<dc:creator>Dr S. Senthil Kumar</dc:creator>
				<category><![CDATA[Herbs in Health]]></category>
		<category><![CDATA[இனிய]]></category>
		<category><![CDATA[எச்சரிக்கை]]></category>
		<category><![CDATA[குரல் வளம் பெற]]></category>
		<category><![CDATA[தாவர விவரங்கள்]]></category>
		<category><![CDATA[மருத்துவ பயன்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://unavunalam.com/?p=1666</guid>
		<description><![CDATA[கடந்த 2000 ஆண்டுகளுக்கும் மேலாக கபத்தால் உண்டாகும் கோளாறுகளுக்கு மருந்தாக பயன்பட்டு வரும் மூலிகை ஆடாதொடை ஆகும். பழங்கால நூல்களில், இந்த தாவரம் ஒரு முக்கியமான மூலிகையென குறிப்பிடப்படுகிறது. இதன் தாவரவியல் பெயர் - Adhatoda Vasica இதர மொழிகளில் &#8211; சமஸ்கிருதம் &#8211; வசாகா, வசிகா சிம்ஹாசயா, ஹிந்தி &#8211; அருஸா, ஆங்கிலம் &#8211; Malabar Nut. தாவர விவரங்கள் நம்நாட்டு தாவரமான இந்த மூலிகை, நம் தேசம் எங்கும் வளருகிறது; குறிப்பாக இமயமலை சாரலில், 1400 [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p></p><p><strong><br />
</strong>கடந்த 2000 ஆண்டுகளுக்கும் மேலாக கபத்தால் உண்டாகும் கோளாறுகளுக்கு மருந்தாக பயன்பட்டு வரும் மூலிகை ஆடாதொடை ஆகும். பழங்கால நூல்களில், இந்த தாவரம் ஒரு முக்கியமான மூலிகையென குறிப்பிடப்படுகிறது.<br />
இதன் தாவரவியல் பெயர் - Adhatoda Vasica<br />
இதர மொழிகளில் &#8211; சமஸ்கிருதம் &#8211; வசாகா, வசிகா சிம்ஹாசயா, ஹிந்தி &#8211; அருஸா, ஆங்கிலம் &#8211; Malabar Nut.</p>
<h3><strong>தாவர விவரங்கள்</strong></h3>
<p>நம்நாட்டு தாவரமான இந்த மூலிகை, நம் தேசம் எங்கும் வளருகிறது; குறிப்பாக இமயமலை சாரலில், 1400 மீட்டர் உயர மலைச் சூழல் வரை வளருகிறது. இந்திய இனங்கள் &#8220;ஆடாதொடை&#8221; என்ற தமிழ்ப் பெயராலேயே குறிப்பிடப்படுகின்றன.<br />
ஆடாதொடை ஒரு அடர்த்தியான, ஒன்றிலிருந்து 2 மீட்டர் உயரம் வரை வளரும் செடி. கோள வடிவமுள்ள இலைகள் 10 &#8211; 16 செ.மீ. நீளமுடையவை. இலைகளில் மெல்லிய நூல் போன்ற முடிகள் இலை அமைப்பு சூலம் போல் அகன்று, நுனியில் குறுகி இருக்கும். இலைகள் இளம் பச்சை நிறங்களில் இருக்கும். உலர்ந்த இலைகள் பழுப்பு நிறமாகும். உலர்ந்த இலைகள் தேநீர் போல் மணமிருந்தாலும், கசப்பு சுவை உடையவை.<br />
பூக்கள் அடர்த்தியாக ஒரே தண்டில் கொத்து, கொத்தாக இருக்கும். மஞ்சரி தண்டு (Peduncle) 3 &#8211; 9 செ.மீ. நீட்டமிருக்கும். இதழ்கள் பெரியதாக, வெண்மையாக, நுனியில் ஊதா வண்ணமாக இருக்கும். தூரத்திலிருந்து பார்த்தால் பூக்கள் சிங்கத்தின் திறந்த வாய் போல் தோன்றும். எனவே &#8216;சிம்ஹாசயா&#8217; என்ற சமஸ்கிருத பெயரும் இந்த மூலிகைக்கு உண்டு. தண்டு உருண்டு இருக்கும். முடிச்சுகள் (கணுக்கள்) உண்டு.<br />
ஆடாதொடையில் &#8220;வாசிசைன்&#8221; (Vasicine) என்ற கசப்பான படிக &#8220;ஆல்கலாய்ட்&#8221; (Alkaloid) &#8211; காரத்தன்மை) உள்ளது. மற்றும் வாசமற்ற, எளிதில் ஆவியாகும், எண்ணையும் உள்ளது. வாசிசைனில், பெகானைன் (Peganine) உள்ளது. வேர்களில் வாசிசினோலின் (Vasicicinolene) வாசிகோல் (Vasicol) மற்றும் பெசானின் உள்ளன. ஒட்டுமொத்தமாக ஆடாதொடையில், வாசமுள்ள எண்ணை, பிசின்கள், கொழுப்புகள், கசப்பு வாசிசைன், சர்க்கரை, உப்பு இவைகள் உள்ளன.</p>
<h3><strong>மருத்துவ பயன்கள்</strong></h3>
<p>இதயம், தொண்டை பாதிப்புகளுக்கு ஆடாதொடை மருந்தாகிறது. கபத்தை கட்டுப்படுத்தும். அமுகக் செய்யும் கிருமிகளை கட்டுப்படுத்தும் கிருமி நாசினி.<br />
கோனேரியா போன்ற பாலியல் நோய்களுக்கு ஆடாதொடை வேர்கள் மருந்தாக பயன்படுகின்றன. பூக்கள் மஞ்சள் காமாலை நோய்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.<br />
தொண்டை கரகரப்பு, தொண்டை கமரல் போன்றவற்றிற்கும் தொடர் இருமலுக்கும் ஆடாதொடை உகந்தது. ஆடாதொடையை தொடர்ந்து உபயோகித்து வர குரல் இனிமையைப் பெறலாம்.<br />
சமீபகால ஆராய்ச்சிகளில் ஆடாதொடை யிலிருந்து கிடைக்கும் &#8216;வாசிசைன்&#8217; பற்றிய பல பயன்கள் தெரிய வந்துள்ளன. இந்த காரத்தன்மையுடைய வாசிசைன் மூச்சுக்குழாய் அடைப்புகளை போக்குகிறது. கர்பப்பையை ஊக்குவிக்கிறது. இதனால் பழங்காலத்தில் பிரசவம் பார்க்கும் செவிலியர்களால், சுலபமாக பிரசவம் ஏற்பட இந்த மூலிகையை பயன்படுத்தி வந்தன. மெதர்ஜின் (Methergin) போன்ற மருந்துகளுக்கு இணையானது. மூச்சுக்குழல் சம்பந்தமான வியாதிகளுக்கு ஆடாதொடை இலைகள் பயன்படுகின்றன. சிகரெட்டைப் போல், இலைகளை சுருட்டி, பற்றவைத்து புகைபிடித்தால் ஆஸ்துமாவுக்கு நல்லது. அசல் சிகரெட் பிடிப்பதையும் கைவிடலாம்!<br />
ஆடாதொடை இருமல், அலர்ஜி, சளி, கோழை இவற்றை குறைக்கும் மருந்து. திராட்சை, ஆடாதொடை இலைகள், கடுக்காய் இந்த மூன்றையும் கலந்து செய்த கஷாயத்துடன் இஞ்சி, கருமிளகு மற்றும் தேன் சேர்த்து குடித்தால் சுவாச மண்டல அவயங்கள் நலம் பெறும். இருமல் போகும். தொண்டைக்கு இதமளிக்கும். கெட்டியான சளி, கோழை, இவற்றை அகற்றும்.<br />
இந்திய மருத்துவ பெயர்களும் செய்யும் விதமும் அடங்கிய பட்டியலில் ஆடாதொடையின் பச்சை மற்றும் காய்ந்த இலைகள் அதிக உதிரப்போக்கை கட்டுப்படுத்தும் என்று குறிப்பிடப்படுகின்றன. ஆயுர்வேதத்தில் &#8216;ரக்த பித்தம்&#8217; எனப்படும் உதிரப்போக்கு கோளாறுகளுக்கு ஆடாதொடை தனியாகவும், பிற மருந்துகளுடன் சேர்ந்தும், பயன்தருகிறது. இதன் பச்சிலை சாறு, தேனுடன் சேர்த்து கொடுக்க உதிரப்போக்கு தடைபடும். சரகசம்ஹிதை ரத்தப்போக்குக்கு ஆடாதொடையை சிபாரிசு செய்கிறது.<br />
உலர்ந்த இலைகளிலிருந்து கிடைக்கும் சாறு, வலியை குறைக்கும் மருந்தாக பயன்படு கிறது.பைலோகார்பின் என்ற கண்களுக்கு ஏற்ற சொட்டு மருந்தின் பக்க விளைவுகளில் ஒன்று அதிக உமிழ் நீர் சுரப்பது மற்றும் ஜீரணகோளாறுகள் ஆகியவற்றை குறைக்கிறது.<br />
வீக்கங்களுக்காக ஆடாதொடை இலைகளிலிருந்து எடுக்கப்பட்ட கலவை சீக்கிரமாக காயங்களை ஆற்றும். ருமாடிஸம் உண்டாக்கும் வலிகளை குறைக்கும்.<br />
கல்லீரல் பாதிப்புகளை ஆடாதொடை தடுக்கிறது.<br />
&#8220;பயோரியா&#8221; விற்கு ஆடாதொடை மருந்தாகும்.<br />
மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அதிக உதிரப்போக்கை ஆடாதொடை கட்டுப்படுத்தும்.<br />
ஷயரோகத்திற்கும் ஆடாதொடை மருந்தாக உதவும். ஆனால் அதன் ஆற்றல் &#8220;ஸ்டெப்டோமைசின்&#8221; (Streptomycin) மருந்தை விட பாதியளவு குறைவு.<br />
பல ஆயுர்வேத மருந்துகளில் ஆடாதொடை சேர்க்கப்படுகிறது. ஆடாதொடை இலைசாறு மூக்கிலிருந்து வரும் ரத்த போக்கை நிறுத்தும். 5 மி.லி. அளவில் சாறு ஒரு நாளில் 2 வேளை குடிக்க வேண்டும்.</p>
<h3><strong>எச்சரிக்கை</strong></h3>
<pre><strong></strong>கர்ப்பஸ்தீரிகள் ஆடாதொடையை உபயோகிக்க கூடாது.</pre>
<p>ஜனவரி 2012</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://unavunalam.com/to-get-a-sweet-voice/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>100 வயது வாழலாம்</title>
		<link>http://unavunalam.com/to-live-for-100-years/</link>
		<comments>http://unavunalam.com/to-live-for-100-years/#comments</comments>
		<pubDate>Mon, 30 Apr 2012 13:38:41 +0000</pubDate>
		<dc:creator>Dr S. Senthil Kumar</dc:creator>
				<category><![CDATA[Foods for Health]]></category>
		<category><![CDATA[100 வயது வாழலாம்]]></category>
		<category><![CDATA[Live long]]></category>
		<category><![CDATA[To Live for 100 years]]></category>
		<category><![CDATA[ஆரோக்கிய மனிதனின் அறிகுறிகள்]]></category>
		<category><![CDATA[எண்ணெயும் நன்மையும்]]></category>

		<guid isPermaLink="false">http://unavunalam.com/?p=1664</guid>
		<description><![CDATA[வருமுன் காக்கும் வைத்திய முறைகளுக்கு ஆயுர்வேதம் பிரசித்தி பெற்றது. ஆயுர்வேத ஆசான்களில் முக்கியமானவரான சரகர், நோய்கள் வராமல் தடுக்கும் உடல் சக்தியை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார். நோயற்ற வாழ்வே ஆயுர்வேதத்தின் தெளிவான லட்சியம். அதுவும் இந்த நோயற்ற வாழ்வை இயற்கையின் உதவியுடன் அடைய வேண்டும் என்பதும் ஆயுர்வேதத்தின் கோட்பாடு. ஆயுர்வேத சிகிச்சை இரண்டு நோக்கங்களை கொண்டிருக்கிறது. ஒன்று, ஆரோக்கியமான மனிதனின் உடல் நலத்தை நிலை நிறுத்துவது. இதனால் அவனுக்கு வியாதி ஏற்படாமல் தடுப்பது &#8211; [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p></p><p style="text-align: justify;"><strong><br />
</strong>வருமுன் காக்கும் வைத்திய முறைகளுக்கு ஆயுர்வேதம் பிரசித்தி பெற்றது. ஆயுர்வேத ஆசான்களில் முக்கியமானவரான சரகர், நோய்கள் வராமல் தடுக்கும் உடல் சக்தியை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார். நோயற்ற வாழ்வே ஆயுர்வேதத்தின் தெளிவான லட்சியம். அதுவும் இந்த நோயற்ற வாழ்வை இயற்கையின் உதவியுடன் அடைய வேண்டும் என்பதும் ஆயுர்வேதத்தின் கோட்பாடு.<br />
ஆயுர்வேத சிகிச்சை இரண்டு நோக்கங்களை கொண்டிருக்கிறது. ஒன்று, ஆரோக்கியமான மனிதனின் உடல் நலத்தை நிலை நிறுத்துவது. இதனால் அவனுக்கு வியாதி ஏற்படாமல் தடுப்பது &#8211; இந்த தடுப்பு முயற்சி &#8220;ஸ்வஸ்த சம்ரக்சணம்&#8221; எனப்படும். இரண்டாவது நோக்கம் நோய்வாய்பட்டவர்களை குணப்படுத்துவது. இது &#8220;ரோக நிவாரணம்&#8221; எனப்படுகிறது.<br />
மனிதன் எப்போது ஆரோக்கியமுள்ளவனாக இருக்கிறான்? சகிப்புத்தன்மை, வலுவான உடல், திடமான மனது, இவை கூடி இருக்கும் போது.</p>
<h3 style="text-align: justify;"><strong>ஆரோக்கிய மனிதனின் அறிகுறிகள்</strong></h3>
<p style="text-align: justify;">நல்ல பசி எடுக்கும். ஜீரண சக்தி நிறைந்திருக்கும்.<br />
மலம், சிறுநீர் கழிதல் &#8216;நார்மலாக&#8217; இருக்கும்.<br />
நல்ல தூக்கமிருக்கும். உற்சாகம் ததும்பும்<br />
நல்ல நிறமும், நல்ல பளபளப்பான சர்மமும், போஷாக்கான உடலும் அமைந்திருக்கும்.</p>
<h3 style="text-align: justify;"><strong>வருமுன் காத்தல்</strong></h3>
<p style="text-align: justify;">வந்த பின் காப்பதை விட, வருமுன் காப்பது மேல். இதற்கான ஆயுர்வேத பரிந்துரைகள்.<br />
தினசரி சூரியன் உதயமாகுமுன் எழுந்திருக்கவும்.<br />
காலைக் கடன்களை செவ்வனே கழிக்கவும்.<br />
தினமும் இரு தடவை புங்கமர குச்சியால் பல் துலக்க வேண்டும் என்கிறார் சரகர். ஈறுகளை காயப்படுத்தாமல் பல் துலக்க வேண்டும். நாக்கை வழிக்க வேண்டும். இதற்கு தங்கம், வெள்ளி, செம்பு, தகரம் இவற்றினால் ஆன நாக்கு வழிப்பானை பயன்படுத்த வேண்டும். இந்த காலத்தில் நாம் படுக்கையில் இருந்து எழுந்தவுடன் பல் துலக்குவது வழக்கம். இந்த வழக்கத்தையே தொடரலாம். ஆனால் பல் துலக்காமல் காபியோ, டீயோ குடிக்க வேண்டாம்.<br />
ஒரு நாளைக்கு இரு தடவை குளிக்கவும். ஆடையின்றி குளிக்க வேண்டாம். குளித்த பின் அழுக்கான, கிழிந்த உடைகளை அணிய வேண்டாம். சுத்தமான சௌகரியமான ஆடைகளை அணிய வேண்டும்.<br />
ஆபரணங்கள் அணிந்து கொள்வது, வைரம், முத்துக்கள் இவற்றை அணிவது மங்களகரமானது.<br />
வாசனை திரவியங்கள் மலர்கள் இவற்றை பயன்படுத்துவது நல்லது. இவைகள் சோகத்தை நீக்கி மனபலத்தையும், உடல்பலத்தையும், ஆயுளையும் அதிகரிக்கும் என்கிறார் சரகர்.<br />
இரு வாரங்களில் ஒரு தடவை கை கால் நகங்களை வெட்டிக் கொள்ள வேண்டும்.<br />
கால், பாதங்கள், மல ஜல அவயங்கள் இவற்றை சுத்தமாக வைத்திருக்கவும்.</p>
<h3 style="text-align: justify;"><strong>எண்ணெயும் நன்மையும்</strong></h3>
<p style="text-align: justify;">1. ஆயுர்வேதத்தின் படி தலையில் தினசரி எண்ணெய் தடவிக் கொள்ள வேண்டும். எண்ணெய் தலைமுடி நரைக்காமல், தலைவலி வராமல் பாதுகாக்கும். மண்டையை பலப்படுத்தி நல்ல தூக்கத்தை கொடுக்கும்.<br />
2. நல்லெண்ணையால் வாய்கொப்பளித்தல் பற்களை பாதுகாக்கும். பசி உண்டாகும். உணவு சுவை நன்கு தெரியும்.<br />
3. எண்ணெய்ப் பசை உள்ள வண்டி நன்கு நகரும். அதே போல உடலின் அவயங்களில் எண்ணெய்ப் பசை நிறைந்தால் அவை நன்கு செயல்படும். எண்ணெய்ப் பசை தோலுக்கும் நல்லது. வாத நோய்களிலிருந்து பாதுகாக்கும். முதுமையின் பாதிப்பு தடுக்கப்படும்.<br />
4. எண்ணெய் மசாஜ் உடலின் துர்நாற்றம், அரிப்பு, வியர்வை, அழுக்கு இவற்றை போக்கும்.<br />
5. பெண்கள் தினசரி கண்களில் மை இட்டுக் கொள்ள வேண்டும்.</p>
<h3 style="text-align: justify;"><strong>உணவு</strong></h3>
<p style="text-align: justify;">1. ஆயுர்வேதம் சொல்வது குளிக்காமல், கைகளில் ஆபரணங்கள் அணியாமல், மந்திரங்கள் சொல்லாமல், கடவுள், முன்னோர்களை வணங்காமல் உணவு உட்கொள்ளக் கூடாது.<br />
2. தவிர கை, முகம், கால் கழுவாமல், வாய் கொப்பளிக்காமல் உணவு உட்கொள்ளக் கூடாது.<br />
3. சுத்தமில்லாதவர்கள் பரிமாறும் உணவை உட்கொள்ளக் கூடாது.<br />
4. ஓர் இரவு பழமையான உணவு பதார்த்தங்களை உட்கொள்ளக் கூடாது. இதற்கு விதிவிலக்கு பழங்கள், சமைக்காத காய்கறிகள், பாதுகாக்கப்பட்ட மாமிசம் போன்றவை.<br />
5. ஒருவருக்கு எவ்வளவு உணவு தேவை என்பது அவருடைய ஜீரண சக்தியை பொறுத்தது.<br />
6. அரிசி, பருப்பு, இலகுவான உணவு என்கிறது ஆயுர்வேதம். கடலைமாவு, நீரில் வாழும் பிராணிகளின் மாமிசம், உளுந்து, பளுவான உணவு என்கிறது ஆயுர்வேதம்.<br />
ஆயுர்வேதத்திற்கு உகந்தவை<br />
சரகர் சில ஆலோசனைகளை உடல் ஆரோக்கியத்திற்காக சொல்லியிருக்கிறார்.<br />
1. உடல் உழைப்பு தேவை, ஆனால் அளவுக்கு மீறி இருக்கக் கூடாது.<br />
2. பாதுகாப்பில்லாத வாகனங்களில் பயணம் செய்ய வேண்டாம். உயரமான மலைகளில் ஏற வேண்டாம். பரிச்சயம் இல்லாத மலைகளில் ஏற வேண்டாம். வேகமாக பாயும் நதிகளில் நீந்த வேண்டாம்.<br />
3. வெளியில் செல்லும் போது தலையில் தொப்பி அணிய வேண்டும். ஒரு தடியையும், குடையையும் எடுத்துச் செல்ல வேண்டும். காலணி அணிய வேண்டும்.<br />
4. பொது இடங்களில் அல்லது சபைகளில் உரக்க சிரிக்க வேண்டாம். கொட்டாவி விடுவது, தும்முவது இவற்றை தவிர்க்க வேண்டும்.<br />
5. சாலையில் எச்சில் துப்ப வேண்டாம். சிறுநீர் கழிக்க வேண்டாம்.<br />
6. பிறர் மனைவியையோ, பொருளையோ நாட வேண்டாம். பொய்கள் சொல்ல வேண்டாம்.<br />
7. குடிப்பது, சூதாடுவது, ஒழுக்கமில்லாதவர்களுடன் நட்பு கொள்வது இவற்றை தவிர்க்கவும்.<br />
8. வாழ்க்கையில் சுக துக்கங்கள் தவிர்க்க முடியாதவை. இவற்றால் மனம் தளர வேண்டாம்.<br />
உடலின் நோய் தடுப்பு சக்தியை ஊக்குவிப்பது<br />
1. ஆயுர்வேதத்தின் படி போஷாக்கான உணவு, ஜீரண &#8216;அக்னி&#8217;, திசுக்களின் உற்பத்தி இவைகள் நோய் தடுப்பு சக்தியை அதிகரிக்கும்.<br />
2. ஆயுர்வேத சிகிச்சை முறையான &#8216;ரசாயனம்&#8217; உடலின் எதிர்ப்பு சக்தியை நன்றாக அதிகப்படுத்தும்.<br />
3. சக்தி வாய்ந்த மூலிகைகள் உபயோகிக்கப்படும். இவற்றால் பக்க விளைவு ஏற்படாது.<br />
4. அற்புதமான பஞ்சகர்மா சிகிச்சையும் தேவைப்பட்டால் மேற்கொள்ளப்படும்.<br />
5. தினசரி உடற்பயிற்சி ஆரோக்கியத்தையும், உடல் வலுவையும் மேம்படுத்தும்.<br />
6. உங்களின் உடலுக்கேற்ற உணவுகள் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.<br />
7. யோகாவும், தியானமும் அவசியத் தேவை.<br />
சரகர் சொல்கிறார் &#8211; ஒழுக்கமும், கட்டுப்பாடும் நிறைந்த மனிதன், நல்ல ஆரோக்கியமான உணவை உண்டு வந்தால் 36,000 இரவுகள் அதாவது 100 வருடங்கள் நோய் நொடியின்றி வாழ முடியும். நல்ல நடத்தையும், நற்குணங்களும், மனோ ஆரோக்கியத்திற்கு உதவும். இதனால் ஒருவனுக்கு ஐம்புலன்களின் கட்டுப்பாடும் வந்து சேரும். அத்தகைய மனிதன் ஒரு முழுமையான மகிழ்ச்சியான வாழ்க்கையை அடைகிறான்.<br />
ஜனவரி 2012</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://unavunalam.com/to-live-for-100-years/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>பச்சைப் பட்டாணி</title>
		<link>http://unavunalam.com/green-peas/</link>
		<comments>http://unavunalam.com/green-peas/#comments</comments>
		<pubDate>Mon, 30 Apr 2012 13:23:14 +0000</pubDate>
		<dc:creator>Dr S. Senthil Kumar</dc:creator>
				<category><![CDATA[Indian Foods]]></category>
		<category><![CDATA[Green]]></category>
		<category><![CDATA[Green Peas]]></category>
		<category><![CDATA[Peas]]></category>
		<category><![CDATA[பச்சைப் பட்டாணி]]></category>
		<category><![CDATA[பச்சைப் பட்டாணி குருமா]]></category>
		<category><![CDATA[பச்சைப் பட்டாணி குருமா செய்முறை]]></category>
		<category><![CDATA[பச்சைப் பட்டாணி சாலட்]]></category>
		<category><![CDATA[பச்சைப் பட்டாணி சாலட் செய்முறை]]></category>
		<category><![CDATA[பச்சைப் பட்டாணி சூப்]]></category>
		<category><![CDATA[பச்சைப் பட்டாணி சூப் செய்முறை]]></category>
		<category><![CDATA[பச்சைப் பட்டாணி ரைஸ்]]></category>
		<category><![CDATA[பச்சைப் பட்டாணி ரைஸ் செய்முறை]]></category>

		<guid isPermaLink="false">http://unavunalam.com/?p=1660</guid>
		<description><![CDATA[பச்சைப் பட்டாணி சூப் தேவை பச்சைப் பட்டாணி - 250 கிராம் கார்ன் ப்ளார் - 2 டேபிள்ஸ்பூன் வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் கொத்தமல்லி - சிறிது உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு செய்முறை முதலில் பச்சைப் பட்டாணியை உப்பு சேர்த்து வேகவைத்து கொள்ள வேண்டும். வேக வைத்த பச்சைப் பட்டாணியை சிறிது தனியே எடுத்து வைத்துக் கொண்டு மீதியை நன்றாக மசித்துக் கொள்ள வேண்டும். இதனை கார்ன் ப்ளாருடன் நன்றாக கலந்து அடுப்பில் [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p></p><h3 style="text-align: justify;"><strong>பச்சைப் பட்டாணி சூப்</strong></h3>
<p style="text-align: justify;"><strong></strong><br />
<strong>தேவை</strong></p>
<pre style="padding-left: 180px;"> பச்சைப் பட்டாணி - 250 கிராம்
 கார்ன் ப்ளார்      - 2 டேபிள்ஸ்பூன்
 வெண்ணெய்      - 2 டேபிள்ஸ்பூன்
 கொத்தமல்லி     - சிறிது
உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு</pre>
<h3 style="text-align: justify;"><strong>செய்முறை</strong></h3>
<p style="text-align: justify;">முதலில் பச்சைப் பட்டாணியை உப்பு சேர்த்து வேகவைத்து கொள்ள வேண்டும். வேக வைத்த பச்சைப் பட்டாணியை சிறிது தனியே எடுத்து வைத்துக் கொண்டு மீதியை நன்றாக மசித்துக் கொள்ள வேண்டும். இதனை கார்ன் ப்ளாருடன் நன்றாக கலந்து அடுப்பில் வைத்துக் கொதிக்க விட வேண்டும். இறக்கும் போது தனியே வைத்துள்ள பட்டாணியைச் சேர்க்கவும். கொத்துமல்லியைச் சிறு துண்டுகளாக்கி மேலே தூவி வெண்ணெய் சேர்த்து பரிமாறவும். பரிமாறும் போது சூப்பின் மேல் மிளகுத்தூள் தூவவும்.</p>
<h3 style="text-align: justify;"><strong>பச்சைப் பட்டாணி சாலட்</strong></h3>
<p style="text-align: justify;"><strong>தேவை</strong></p>
<p style="padding-left: 180px; text-align: justify;">பச்சைபட்டாணி &#8211; 1/4 கிலோ<br />
தக்காளி &#8211; 2<br />
துளசி இலைகள் &#8211; 3 டீஸ்பூன்<br />
சீஸ் &#8211; 50 கிராம்</p>
<h3 style="text-align: justify;"><strong>ட்ரஸ்ஸிங்</strong></h3>
<p style="padding-left: 180px; text-align: justify;">வினிகர் &#8211; 1 டேபிள் ஸ்பூன்<br />
பூண்டு &#8211; 1 பல்<br />
ஆலிவ் ஆயில் &#8211; 2 டீஸ்பூன்<br />
உப்பு &#8211; தேவையான அளவு<br />
மிளகுத்தூள் &#8211; 1 டீஸ்பூன்</p>
<h3 style="text-align: justify;"><strong>செய்முறை</strong></h3>
<p style="text-align: justify;"><strong></strong>தக்காளியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பட்டாணியின் தோலை உரித்து விதைகளை எடுத்து தண்ணீரில் போட்டு சிறிது உப்பு சேர்த்து வேக விடவும். பூண்டை நசுக்கிக் கொள்ளவும். ட்ரஸ்ஸிங்கிற்கு கொடுத்துள்ள பொருட்களையெல்லாம் ஒன்றாகக் கலந்து பட்டாணி சூடாக இருக்கும் பொழுதே அதனுடன் சேர்த்துக் கலக்கவும். பின்னர் நறுக்கிய தக்காளி, பேசில் இலைகளை சாலடுடன் சேர்த்துக் கிளறவும். கடைசியாக சீஸை துருவி மேலாகத் தூவி அலங்கரிக்கவும்.</p>
<h3 style="text-align: justify;"><strong>பச்சைப் பட்டாணி ரைஸ்</strong></h3>
<p style="text-align: justify;"><strong>தேவை</strong></p>
<p style="padding-left: 180px; text-align: justify;">பொன்னி பச்சரிசி &#8211; 1 ஆழாக்கு<br />
பச்சை பட்டாணி &#8211; 250 கிராம்<br />
பச்சை மிளகாய் &#8211; 5<br />
கொத்தமல்லி &#8211; 1/2 கட்டு<br />
சோம்பு &#8211; 1 டீஸ்பூன்<br />
மிளகு &#8211; 1/2 டீஸ்பூன்<br />
இஞ்சி &#8211; சிறிது<br />
பூண்டு &#8211; 5 பல்<br />
வெங்காயம் &#8211; 1<br />
தக்காளி &#8211; 1<br />
முந்திரி &#8211; 10<br />
பட்டை &#8211; 1 இன்ச்<br />
கிராம்பு &#8211; 1<br />
பிரிஞ்சி இலை &#8211; 1<br />
நெய் &#8211; 1 டேபிள் ஸ்பூன்<br />
எண்ணெய் &#8211; 1 டேபிள் ஸ்பூன்<br />
உப்பு &#8211; தேவையான அளவு<br />
தண்ணீர் &#8211; 21/4 டம்ளர்</p>
<h3 style="text-align: justify;"><strong>செய்முறை</strong></h3>
<p style="text-align: justify;">அரிசியைக் கழுவி அரைமணி நேரம் ஊற வைக்கவும். பச்சை மிளகாய், கொத்தமல்லி, சோம்பு, மிளகு, இஞ்சி, பூண்டு முதலியவற்றை அரைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு குக்கரில் எண்ணெய், நெய் இரண்டையும் ஊற்றிக் காய வைத்து அதில் பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை போட்டு தாளித்து பின் வெங்காயம், அரைத்த மசாலா போட்டு நன்கு வதக்கி கடைசியாக தக்காளி, அரிசி போட்டு வதக்கவும். பின்னர் தண்ணீர் ஊற்றி உப்பு, பட்டாணி போட்டு குக்கரை மூடி ஒரு சத்தம் விடவும். குக்கரைத் திறந்து சாதத்தை நன்கு கிளறி, முந்திரியை நெய்யில் வறுத்து சாதத்தின் மீது தூவி அலங்கரித்து வெங்காயப் பச்சடியுடன் பரிமாறவும்.</p>
<h3 style="text-align: justify;"><strong>பச்சைப் பட்டாணி குருமா</strong></h3>
<p style="text-align: justify;"><strong>தேவை</strong></p>
<p style="padding-left: 180px; text-align: justify;">பச்சைப் பட்டாணி &#8211; 1/2 கப்<br />
எலுமிச்சம் பழச்சாறு &#8211; 3 டீஸ்பூன்<br />
தேங்காய் துருவியது &#8211; 1/2 கப்<br />
முந்திரிப் பருப்பு &#8211; 20<br />
பெரிய வெங்காயம் நறுக்கியது &#8211; 1/2 கப்<br />
முந்திரி, கிஸ்மிஸ் சேர்ந்து- 2 டே. ஸ்பூன்<br />
எண்ணெய், உப்பு, நெய் &#8211; தேவையானது<br />
கொத்தமல்லி &#8211; சிறிது</p>
<h3 style="text-align: justify;"><strong>அரைக்க</strong></h3>
<p style="padding-left: 180px; text-align: justify;">பட்டை, கிராம்பு, ஏலக்காய் &#8211; 6 (தலா 2)<br />
பச்சை மிளகாய் &#8211; 6<br />
சீரகம் &#8211; 1/2 டீஸ்பூன்<br />
கசகசா &#8211; 2 டீஸ்பூன்<br />
பெருஞ்சீரகம் &#8211; 1/2 டீஸ்பூன்<br />
மல்லி &#8211; 2 டீஸ்பூன்<br />
சிவப்பு மிளகாய் &#8211; 2<br />
இஞ்சி, பூண்டு நறுக்கியது &#8211; 2 டீஸ்பூன்</p>
<h3 style="text-align: justify;"><strong>செய்முறை</strong></h3>
<p style="text-align: justify;">காய்கறிகள் அனைத்தையும் ஒரே அளவாக நறுக்கவும். தேங்காயையும் 20 முந்திரியையும் அரைத்துக் கொள்ளவும். அரைக்க கொடுத்துள்ள மசாலா பொருட்களையும் அரைக்கவும். சிறிது நெய்யில் முந்திரிப் பருப்பையும், கிஸ்மிஸ்ஸையும் வறுத்துக் கொள்ளவும். ஒரு குக்கரில் எண்ணெய், நெய் சூடாக்கி அதில் பெரிய வெங்காயம் போட்டு வதக்கி பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை போட்டு எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். காய்கறிகளை ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு வதக்கவும். பின்னர் காய்கள் வேகும் அளவுக்கு நீர் ஊற்றி உப்பு சேர்த்து வேக வைக்கவும். வெந்ததும் திறந்து அரைத்த தேங்காய் முந்திரி விழுது சேர்த்து கொதிக்க விடவும். எலுமிச்சை சாற்றையும் சேர்க்கவும். வறுத்து வைத்துள்ள முந்திரி, கிஸ்மிஸ் போட்டு கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.</p>
<p style="text-align: right;">
ஜனவரி 2012</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://unavunalam.com/green-peas/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
	</channel>
</rss>
